search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாவூத் இப்ராகிம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாஜக வாஷிங் மெஷின்' என்ற புதிய இயந்திரத்தை பவன் கெரா அறிமுகப்படுத்தினார்
    • புதிதாக ஒரு வாஷிங் பவுடர் தற்போது வந்திருக்கிறது. எல்லா கறையையும் அது நீக்கி விடுகிறது. அதற்குப் பெயர் 'மோடி வாஷிங் பவுடர்

    மூத்த காங்கிரஸ் தலைவர் பவன் கெரா, இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் 'பாஜக வாஷிங் மெஷின்' என்ற புதிய இயந்திரத்தை அறிமுகப்படுத்தினார்.

    அதனுள், 'ஊழல்', 'பாலியல் வன்புணர்வாளர்', 'மோசடி பேர்வழி ' போன்ற வார்த்தைகள் எழுதப்பட்ட 'கறை படிந்த' டி-சர்ட்டை வைத்தார். வாஷிங் மெஷினில் இருந்து டி-சர்ட் வெளியே எடுத்தபோது, 'சுத்தமாக' இருந்தது. அந்த 'சுத்தமான' டி-ஷர்ட்டில் 'பாஜக மோடி வாஷ்' என்று எழுதப்பட்டிருந்தது.

    பின்னர் பேசிய பவன் கெரா, புதிதாக ஒரு வாஷிங் பவுடர் தற்போது வந்திருக்கிறது. எல்லா கறையையும் அது நீக்கி விடுகிறது. அதற்குப் பெயர் 'மோடி வாஷிங் பவுடர்'. அதை பயன்படுத்தும் வாஷிங் மெஷினின் விலை 8,552 கோடி ரூபாய் தான். இது தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பெற்ற தொகையாகும்.

    நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாஜகவில் இணைந்தால் அடுத்த கணமே அவர் குற்றமற்றவர் என்று அறிவிக்கப்படுவார். தாவூத் இப்ராகிமையும் சுத்தம் செய்யும் வாஷிங் மெஷின் பாஜகவிடம் உள்ளது. அவரை பாஜக வாஷிங் மெஷினின் உள்ளே வையுங்கள். அவர் வெளியே வரும் போது ராஜ்யசபா எம்பியாக கூட வரலாம்.

    சுத்தப்படுத்துவது மட்டுமின்றி இந்த மெஷின், மோசடி பேர்வழியை தேசப்பற்றாளராகவும் மாற்றுகிறது. வழக்கு விசாரணை வேகத்தை குறைக்கவும் செய்கிறது என்று அவர் தெரிவித்தார். 

    • கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி முறைகேடு தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல்.
    • விவசாய நிலங்கள் ஏலத்தில் விற்பனைக்கு வந்தன.

    மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம். இவர் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராகிம் மற்றும் இவரது குடும்பத்தாருக்கு சொந்தமான சொத்துக்களை மத்திய அரசு பறிமுதல் செய்துள்ளது. கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி முறைகேடு தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில், தாவூத் இப்ராகிமின் தாய் அமினா பி பெயரில் உள்ள விவசாய நிலத்தை மத்திய அரசு ஏலத்தில் விட முடிவு செய்தது. அதன்படி ஏலம் இன்று நடைபெற்றது. மகாராஷ்டிரா மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள மும்பாகே கிராமத்தில் இருந்த நான்கு விவசாய நிலங்கள் ஏலத்தில் விற்பனைக்கு வந்தன.

    இதில் இரண்டு நிலங்களை வாங்க யாரும் முன்வரவில்லை. ஆனால், ரூ. 15 ஆயிரம் என்ற மிக குறைந்த விலையில் ஏலத்திற்கு வந்த நிலம் ரூ. 2.01 கோடி விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலம் 170.98 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது ஆகும். இதே போன்று 1730 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட மற்றொரு நிலம் ரூ. 3 லட்சத்து 28 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

    தாவூத் இப்ராகிம் குடும்பத்தாருக்கு சொந்தமான நிலத்தை யார் வாங்கியது என்ற விவரங்கள் மர்மமாகவே வைக்கப்பட்டு உள்ளன. இன்று நடைபெற்ற ஏலத்திற்கு கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்து வருகிறார்.
    • ஏலம் விடப்பட உள்ள 4 சொத்துகளின் ஆரம்ப விலை ரூ.19 லட்சத்து 20 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மும்பை:

    மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்து வருகிறார். வெளிநாடு தப்பிய தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகளை மத்திய அரசு கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி முறைகேடு தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்து உள்ளது.

    இந்தநிலையில் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) தாவூத் இப்ராகிமின் தாய் அமினா பி பெயரில் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள 4 விவசாய நிலத்தை மத்திய அரசு ஏலம் விட உள்ளது.

    ஏலம் விடப்பட உள்ள 4 சொத்துகளின் ஆரம்ப விலை ரூ.19 லட்சத்து 20 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏலம் விடும் பணி மும்பையில் நடைபெறுகிறது. ரத்னகிரி தாவூத் இப்ராகிமின் சொந்த ஊராகும். சிறுவயதில் அவர் அங்கு சில காலம் வாழ்ந்து உள்ளார்.

    கடந்த 2017-ம் ஆண்டு மும்பை பென்டி பஜாரில் இருந்த தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட சொத்துகள் ரூ.11 கோடிக்கு ஏலம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளிகள் ரியாஸ் பத்தி மற்றும் முகமது சலீம்.
    • மிரட்டி பணம் பறித்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் அதிபர் ரியாஸ் பதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மும்பை:

    மும்பை வெர்சோவா பகுதியை சேர்ந்த ஒருவரை தொழில் அதிபரும், மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளியுமான ரியாஸ் பத்தி மற்றும் முகமது சலீம் ஆகியோர் மிரட்டி 30 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் 7 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறித்தனர்.

    இதுதொடர்பாக வெர்சோவா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் அதிபர் ரியாஸ் பதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் இதற்கு முன்பும் நில அபகரிப்பு, பணம் பறிப்பு போன்ற பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தாவூத் இப்ராகிமை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்து இருந்தது.
    • டி கம்பெனி என்ற சர்வதேச பயங்கரவாத நெட் வொர்க்கை அனிஸ் இப்ராகிம் ஷேக், சோட்டா ஷகீல், ஜாவித் சிக்னா, டைகர் மேமன் ஆகியோருடன் இணைந்து நடத்தி வருகிறார்.

    மும்பை:

    1993-ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

    இந்த தொடர் குண்டு வெடிப்புக்கு நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிம் மூளையாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. அவன் தனது கூட்டாளிகள் மூலம் இந்த சதி செயலில் ஈடுபட்டுள்ளான்.

    தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானுக்கு தலைமறைவானான். தற்போது அவன் எங்கு இருக்கிறான் என்ற விவரம் தெரியவில்லை. தாவூத் இப்ராகிமை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்து இருந்தது.

    விசாரணை அமைப்பான என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) கடந்த பிப்ரவரி மாதம் தாவூத் இப்ராகிமின் டி நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்தது.

    இந்தநிலையில் 1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.25 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ. இன்று அறிவித்துள்ளது.

    இதேபோல தாவூத் இப்ராகிமின் நெருங்கிய உதவியாளரான ஷகீல் ஷேக் என்கிற சோட்டா ஷகீலுக்கு ரூ.20 லட்சமும், கூட்டாளிகளான ஷாஜி அனிஸ் என்கிற அனிஸ் இப்ராகிம் ஷேக், ஜாவித் படேல் என்கிற ஜாவித் சிக்னா, இப்ராகிம் அப்துல் ரசாக் மேமன் என்கிற டைகர் மேமன் ஆகியோருக்கு தலா ரூ.15 லட்சமும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    இவர்கள் அனைவரும் 1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள். அவர்களை பற்றிய தகவல்களை என்.ஐ.ஏ. கேட்டுள்ளது. இது அவர்களை கைது செய்ய வழி வகுக்கும்.

    டி கம்பெனி என்ற சர்வதேச பயங்கரவாத நெட் வொர்க்கை அனிஸ் இப்ராகிம் ஷேக், சோட்டா ஷகீல், ஜாவித் சிக்னா, டைகர் மேமன் ஆகியோருடன் இணைந்து நடத்தி வருகிறார்.

    ஆயுதக்கடத்தல், போதை பொருள், பயங்கரவாதம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகிறது. லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தீவிரமாக இணைந்து செயல்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமிற்கு சொந்தமாக மும்பையில் உள்ள 4 மாடி கட்டிடம் ரூ.3.51 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. #dawoodibrahim
    மும்பை:

    மும்பை குண்டுவெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிம் இந்தியாவில் இருந்து தப்பி பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கிறான். அவனுக்கு 28 ஆண்டுகளாக பாகிஸ்தான் அரசாங்கம் அடைக்கலம் கொடுத்து இருக்கிறது.

    தாவூத் இப்ராகிம்மை இந்தியா கொண்டுவர மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்தும் பாகிஸ்தான் அரசு தங்களிடம் தாவுத் இப்ராகிம் இல்லை என மறுத்துள்ளது.

    இதற்கிடையே மும்பையில் உள்ள தாவூத் இப்ராகிமின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. தாவூத்தின் முடக்கப்பட்ட சொத்துக்களை விரைவில் ஏலம்விட உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தாவூத் இப்ராகிம் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு வருகிறது.  

    இந்நிலையில், தெற்கு மும்பையில் உள்ள பேந்தி பஜார் பகுதியில் அமைந்துள்ள தாவுத்திற்கு சொந்தமான 4 மாடி கட்டிடத்தை மத்திய நிதி அமைச்சகம், கடத்தல்காரர்கள் மற்றும் அந்நிய செலாவனி மோசடியாளர்கள் சட்டத்தின் கீழ் நேற்று ஏலத்தில் விட்டது.

    ஆரம்ப விலையாக ரூ.79 லட்சம் நிர்ணயிக்கப்பட்ட இதனை ஏலத்தில் வாங்குவதற்காக சையிப் புர்ஹானி மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் புபேந்திர பரத்வாஜ் ஆகிய இரண்டு தரப்பு பங்கேற்றது, இறுதியில் சையிப் புர்ஹானி மேம்பாட்டு அறக்கட்டளை மசுல்லா என பெயரிடப்பட்ட 4 அடுக்கு கட்டிடத்தை ரூ.3.51 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது. #dawoodibrahim
    மிரட்டி பணம் பறித்தது தொடர்பான வழக்கில் தாவூத் இப்ராகிம் அவரது தம்பி இக்பால் கஸ்கர் மற்றும் அனீஸ் இப்ராகிம் ஆகியோர் மீது மராட்டிய மாநில போலீசார் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
    மும்பை :

    இந்தியாவில் நடைபெற்ற 1993 மும்பை குண்டு வெடிப்பு சம்பவங்கள் உள்பட பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதன்பேரில் பாகிஸ்தானிடம் தகவல்கள் வழங்கியும், அந்த நாடு தாவூத் இப்ராகிமை இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை. அத்துடன் தங்கள் நாட்டில் அவர் இல்லவே இல்லை என உறுதிபட மறுத்து வருகிறது.

    உலக அளவில் 2–வது மிகப்பெரும் கோடீஸ்வர குற்றவாளியான தாவூத் இப்ராகிமை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்து உள்ளது. இவரது தம்பி இக்பால் கஸ்கர் மும்பையில் வசித்து வருகிறார். தாவூத் இப்ராகிமின் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களை இவர் கண்காணித்து வருகிறார்.  

    மும்பை, தானேவில் உள்ள கோரை பகுதியில் 38 ஏக்கர் நிலம் கைமாற்றப்பட்டது தொடர்பாக இக்பால் கஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் பிரபல கட்டுமான தொழிலதிபர் ஒருவரை மிரட்டி ரூ.3 கோடி பணம் பறித்துள்ளார். கட்டுமான அதிபர் தானே பகுதி போலீசாரிடம் கடந்த வருடம் அளித்த புகார் அடிப்படையில் இக்பால் கஸ்கரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையின் போது இக்பால் கஸ்கர் மட்டுமல்லாது தாவூத் இப்ராகிம் மற்றும் அனீஸ் இப்ராகிம் ஆகியோரும் மிரட்டி பணம் பறித்த விவகாரத்தில் ஈடுபட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இந்நிலையில், தாவூத் இப்ராகிம், இக்பால் கஸ்கர் மற்றும் அனீஸ் இப்ராகிம் ஆகியோர் மீது தானே போலீசார் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். தாவூத் தரப்பு மிரட்டி பணம் பறித்தது தொடர்பான அனைத்து ஆதாரங்களுடனும் இந்த குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

    தானே காசர்வடவலி பகுதியை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளரிடம், தாவூத் இப்ராகிம் பெயரை சொல்லி மிரட்டி, ரூ.30 லட்சமும், ரூ.5 கோடி மதிப்பிலான 4 வீடுகளையும் கடந்த ஆண்டு அபகரித்த வழக்கில் இக்பால் கஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.    
    ×